Search This Blog

Monday 28 July 2014

மரியாதை...!!!

கல்விக்கும் கற்றவனுக்கும் உரித்தான
கற்பு என்னும் மரியாதை இன்று அறிந்தே
கடத்தல் செய்யப்படுகின்ற உண்மை...

கல்விக்கான மரியாதை இடம்மாறி
கரை மாறி நின்று சிரிக்கின்றது....!

விலையாகி போகும் கணக்கற்ற மரியாதை
விழுத்தி விடுகின்றது கற்றவனை ஆழக்குழியில்....

மாண்பு பெற்ற கல்வி கொண்ட மரியாதை
மாண்டு போனது பணத்தால் இன்றைய உலகில்....

வைத்தியர் ஆகின்றான் விலங்கியல் கற்காதவன்....!
வற்றிப்போன குளத்தில் தொடர்மாடி கட்டுபவனை
பொறியியலாளன் என்கின்றது பணம்...!

பொறிமுறை அறிந்து கற்றவனும் பொறியியலாளன் - பணத்தில்
பொறி வைத்து பட்டம் பெற்றவனும் பொறியியலாளன்.

மரியாதை இங்கே அல்லல் படுகின்றது
மடிந்து போனாலும் பாழாய்ப்போனோர்
மரியாதையினை விடுவதாக இல்லை..!

பெரியோருக்கும் இல்லை முதியோருக்கும் இல்லை
பெண்மைக்கும் இல்லை மென்மைக்கும் இல்லை

அட மனிதத்திற்கே இங்கே மரியாதை இல்லை....!
அழிந்து போவது மரியாதையா அன்றி  மனிதமா..?

கேள்விக்குறியுடன் மரியாதை
கேட்பாரற்று மெளனித்து உறங்குகின்றது....!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மரியாதை" என்ற தலைப்பில் இன்று (28.07.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


1 comment:

  1. "வைத்தியர் ஆகின்றான் விலங்கியல் கற்காதவன்....!
    வற்றிப்போன குளத்தில் தொடர்மாடி கட்டுபவனை
    பொறியியலாளன் என்கின்றது பணம்...!" என
    அழகாகச் சுட்டிக்காட்டி உள்ளீர்கள்!

    ReplyDelete