Search This Blog

Thursday 14 February 2013

முத்தி நிலை அடைந்தாலும் முற்றுப்பெறாது இந்த காதல்...!!!




முன்னிரவுகளில்
முகம் பொத்தி விம்மி அழுத நினைவுகள்...!
முகமூடி போர்வைக்குள்ளே 
முடங்கி வாழ்ந்த பலாத்கார கொடிய வாழ்வு...!

முகப்புத்தகத்திலும் என்னை 
முடக்கி வைத்திருந்த உன் மனதை எண்ணி 
முள்ளாய் குத்திய  தருணங்கள்...!

முழுவதுமே முகவரி அற்று போய் விடுகின்றது...!!!
முதன்முதல் எம் காதலில் வந்த "காதலர் தினத்தில்"
முதன்முதலாய் நீ தொலைபேசியில் இட்ட 
முத்தச்சத்தம் காதுகளில் ஒலிக்கும் போது.....


முடிவாகிப்போனது நீயன்றி என் காதலல்ல...!!! 
முணு முணுத்து கொண்டே தான் இருக்கின்றது - என்னுள்  
முடங்கி போயிருக்கும் மெளனக்காதல்...!!!

முத்தி நிலை அடைந்தாலும் 
முற்றுப்பெறாது இந்த காதல்...!!!  
முடித்து சென்ற உனக்கு 
முடிவிலி பற்றி அறிந்திட தெரியாதே...!

முன் ஜென்ம பந்தமோ என்றாய்...!
முத்தே பவளமே வைரமே என்றாய்...!
முட்டாளே என்ற நீ இன்று - என் 
முகம் கூட மறந்திருப்பாய்...!!! 

காலங்கள் கடந்தாலும் 
காதல் கசங்கி போய் விடவில்லை...!
காதல் என்றுமே அழியாதது....!!!
காதலின் அடிப்படை அறிவற்ற உன்னை கொண்டு 
காதலை கணக்கிட முனைவது அறியாமை..! 

காதலன் என்ற தகுதி அற்ற - நீ 
கணவனாய் இன்னொரு புது பதவியை 
காசை கொடுத்தா இரந்தா பெற்றாய்??

காதலர் தினம் நினைவற்று போய்
கால் போன போக்கிலே - நீ 
காலி வீதியெங்கும் அலைவதாய் கேள்வி...!!!


காசை கொடுத்து உன்னை விலைக்கு வேண்டியவளுக்கு 
காட்டுகின்றாயோ விசுவாசம் என்று மனம் எண்ணினாலும் 
காலத்தால் காதல் சொல்லும் பழிவாங்கல் என்கின்றது அறிவு...!!! காலம் வரைக்கும் காதல் வாழத்தான் செய்கின்றது...!!! காதலுக்கு "உயிர்"  இருக்கத்தான் செய்கின்றது...!!!

அரசி  

No comments:

Post a Comment