Search This Blog

Tuesday 9 February 2010

இதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!!

பணத்திற்கும் பகட்டிற்கும்
பல் இளிக்கும் கூட்டம்...!
பந்தா காட்டி பழகுவதும்..
பச்சோந்தி தனமாய் உரு மாற்றுவதும்
முதன்மை குணங்களாம்..!!

இமயமாய் இடுக்கண் வருங்கால்..
இழிமொழி கொண்டு வைய்ந்திடும்
இரு வேடமிட்ட இரத்த உறவுகளாம்
இவர்கள்...!!!
இரத்தத்தினை உறிஞ்சிடும் உறவுகள்
இரத்த உறவுகள் தானோ...

இரு வதனம் கொண்டு
இன்பமாய் மலர்ந்து பேசி,,
இரண்டகம் செய்து குந்தகம் விளைவிக்கும்
இரணியர் கூட்டமன்றோ..??? 

நெஞ்சத்திலே வஞ்சம் சேமித்து -  எமக்கு
பஞ்சம் வரும் போது கொஞ்சம்
இனம் காட்டிடுவர் - தம்
இரும்பு நெஞ்சமதை

இருப்பதை கொடுத்தாலும்...
இல்லாததை இல்லை என்றாலும்,,
இடித்து பேசிடும் பொல்லாத கூட்டம்...!!
இதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!
இப்படி ஒரு உறவு
இருந்தால் என்ன...???
இறந்து தான் போனால் என்ன...???

”அரசி”

No comments:

Post a Comment