Search This Blog

Friday 12 February 2010

காதல்...!!! காதல்...!!! காதல்...!!!





இதயக்கூட்டில் ஒரு புது வரவு....!!
இம்சையாய் ஒரு இன்பம்....!!
இரவின் மடியில் தாலாட்டிடும் - ஒரு
இனிமையான மழலை....!!

உயிர் நீங்கி போயினும்....
வேரூன்றி வானளாவி கிளை பரப்பும்
பெரு விருட்சம்..!!!

கடவுளை ஒத்து,,
கல் என்றவனுக்கு சூனியமாயும்
கடவுள் என்றவனுக்கு பேரின்ப பரவசமாயும்
காட்சி கொடுக்கும் தெய்வம்...!!

புனிதமாய் பூசித்து,,
தூய்மையாய் நோக்கி,,
உண்மையாய் வழி நடந்திட்டால்..
அமுதமாய் கையில் சேர்ந்திடும்
அதிசயப்புதையல்...!!!

காலங்கள் கடந்தாலும்
கசங்கிப்போயிடாத அற்புதம்...!!!

கனவோடு,
கண்ணீரையும்,,
காலத்தால் அழியாத..
காற்றோடு கரைந்திடாத...
நினைவுகளையும்,,,
உயிரோடு பிரசவிக்கும் 
தங்கத்தாய்...!!

புது இலக்கணமாய்...
புரட்சி புரிந்திடும்
புதுக்காவியம்...!!!

புல்லரிக்கும் உணர்வோடு – சின்னப்
புன்னகையும் சிணுங்கலும் வாங்கி
புத்துயிர் பெற்று பூமியில்
புதிதாய் பூத்திடும்,,
உயிர்ப்பூ....!!!


- அரசி -

No comments:

Post a Comment