Search This Blog

Sunday 14 February 2010

பெப்ரவரி 14….!!!


ஆண்டுகள் பல 
கரைந்தும்...இன்னும்....
ஈரமாய் விழிகள்...!!
விதி வசத்தால்,,
விடுகை பெற்ற
விசித்திர காதல்..!!!

மூளை குழம்பி
மூலை முடுக்கெல்லாம்..- உன்
முகத்தரிசனம்..!!!
மூச்செடுக்கவே விருப்பின்றி
ஒவ்வொரு கணமும் ரணமாய்
விடை பெற்று சென்று விட்டன...!

உலகமே எதிரியானது....!
உண்மை கூட பொய்யானது...!
உதிரம் உறைந்ததாய் ஒரு
உணர்வு...சடுதியாய்
சூழ்ந்த இருளால்
சூனியமாய் நான்...!


ஆனாலும்...
ஆவலோடும்
ஆசையோடும்
என்றென்றும்
எதிர்நோக்குவேன்
பெப்ரவரி 14…!!!

இன்று கூட...........
இரண்டாவது தடவையாகவும்
இன்பமாய் வரவேற்கின்றேன்....!
இந்த மகத்தான் நாளினை...
எங்கே நீ மறந்து கூட – இந்த நாளில்
எனக்கு அழைப்பை ஏற்படுத்த மாட்டாயோ???


உனக்குள் மெல்ல உறங்குகின்ற காதல்...
உயிர் பெற்று விடாதோ இந்த நாளில்..??
உண்மை விழித்திடாதோ இந்த நாளில்...??
உறவுகளுக்கு உணர்த்தி மீளாயோ நீ..??
உறங்குவதாய் பாசாங்கு காட்டும் - உன்
உண்மையற்ற உறக்கம் கலைத்திட மாட்டாயோ..??

சின்ன நப்பாசையோடு....
சிரித்து மகிழும் இளம் காதல்
சிட்டுக்களின் இன்பத்தில்
சிரிக்கின்றேன் நானும்.....



- அரசி -


No comments:

Post a Comment