Search This Blog

Showing posts with label நினைவாலயம். Show all posts
Showing posts with label நினைவாலயம். Show all posts

Wednesday 20 November 2013

நிலை பெற்று சென்ற மாணிக்கங்கள்..!!!


நினைவு கூறும் நிலையற்ற மனிதர்களாய்
நினைவாலயங்கள் தேடி அலைகின்றோம்...!!!
நிர்க்கதியாய் போனது நீங்கள் அல்ல....
நிலை பெற்று சென்ற மாணிக்கங்கள் - உங்கள்
நினைவில் மட்டும் தான் நாம்.....!!!

நீவிர் விட்டுச்சென்ற சுவடுகள்
நிலை தடுமாறும் நிலையில்.....
நின்று வேடிக்கை பார்த்து கார்த்திகையில்
நினைவு கூறுகின்றோம்.....!!!
நிலையற்ற மனிதர்களாய்....
நிலமற்று நிர்க்கதியாகி நின்று....


நிலம் கொடுத்தீர் உயிர் தந்து..
நிலமிழந்தோம் உம்
நினைவாலயங்களையும் தொலைத்தோம்..!!
நிற்கின்றோம் ஆரம்ப அத்தியாயங்களில்....!!!
நினைவு கூறுகின்றோம்....!!!
நிலையில்லா தேசத்திலிருந்து....
நிலம் நீங்கி உங்கள்
நினைவுகளை சுமந்து....

நிலம் மீட்க
நிலை பெற்று சென்ற சிகரங்களே.....!!!
நிம்மதியற்று நீங்கள்
நின்று உறங்கும் காட்சி
நிழலாடுகின்றது....!!!
நினைவு கூறுகின்றோம்....!!!
நிலை கெட்ட எம்
நிலை எண்ணித் தலை குனிந்து
நினைவு கூறுகின்றோம்...!!


அரசி நிலவன்