உனக்கும் எனக்குமான இடைவெளி ஆயிரம் மைல்கற்களை தாண்டி நிற்கின்றது.....!
உள்ளங்கள் அணுக்களின் பிணைப்பை வென்ற இணைப்பில் இணைந்திருகின்றது....!
உள்ளங்கள் அணுக்களின் பிணைப்பை வென்ற இணைப்பில் இணைந்திருகின்றது....!
உணர்ந்து கொண்டும் ஏன் அடம்பிடிக்கின்றாய்...!
உயிர் வதை பெற்றிட ஒற்றைக்காலில் நிற்கின்றாய்..!
உயிர் வதை பெற்றிட ஒற்றைக்காலில் நிற்கின்றாய்..!
நம்பிக்கைகள் உன்னை நட்டாற்றில் கை விட்டு
சென்றுவிட்டதாக கலங்கித் தவிக்கின்றாய்...!
உன்னை மூடியிருந்த கறை மெல்ல மெல்ல நீங்கிப்போவதும்,
உன் மேல் கொண்ட தவறான புரிதல்கள்,
உன்னைப்பற்றிய வதந்திகள் பறந்தடித்து ஓடுவதும்
உன் மேல் கொண்ட தவறான புரிதல்கள்,
உன்னைப்பற்றிய வதந்திகள் பறந்தடித்து ஓடுவதும்
உந்தன் விடியலுக்கான அறிகுறி என்பதை
நீ அறியாமல் இருப்பதேனோ??
உருக்குலைந்த உந்தன் உருவத்திற்குள் ஒரு
உன்னதமான உள்ளம் உண்டென்பதை
உலகம் மெல்ல மெல்ல அறிந்து கொண்டு வருகின்றது என்பதை அறியாயோ....!
உனக்கே உனக்காய் உயிர் கொண்ட உறவுகளாய் நாம் இருக்க
உயிர் பறிக்கும் களம் நாடி செல்ல ஏன் துடிக்கின்றாய் உயிரே??
உயிர் பறிக்கும் களம் நாடி செல்ல ஏன் துடிக்கின்றாய் உயிரே??
உயிரும் உடலுமாய் போனவனே
உன்னை தடுப்பதில் காட்டும் வேகத்தின் காரணம் அறியாயோ???
முண்டியடித்து உயிர்ப்பலி ஆகிடத் துடிப்பது நியாயமோ??
முண்டியடித்து உயிர்ப்பலி ஆகிடத் துடிப்பது நியாயமோ??
போராட்டங்களும் எதிர்நீச்சலும் பொருளற்று போக விடாதே...!
காத்திருப்புக்களும் கண்ணீரும் கலைந்து போக விடாதே...!
காத்திருப்புக்களும் கண்ணீரும் கலைந்து போக விடாதே...!
முழுவதுமாய் தோற்று விடுவேன்....!
முடித்து செல்லாதே இடைநடுவில்.......
முடித்து செல்லாதே இடைநடுவில்.......
பாதை தவறி நாம் பயணிக்கவில்லை....
பாதைகள் தடுக்கப்பட்டு
பயணம் இடைநிறுத்தப்பட்டு
பரிதவித்து நின்று போராடுகின்றோம்...!
பாதைகள் தடுக்கப்பட்டு
பயணம் இடைநிறுத்தப்பட்டு
பரிதவித்து நின்று போராடுகின்றோம்...!
நேர்மைக்கும் சட்டத்திற்கும் கிடைத்த சன்மானங்கள்
எங்கள் விழிகளில் கண்ணீராய் வலிகளில் உதிரங்களாய்
நிறைந்து போய் கிடக்கின்றது....!
எங்கள் விழிகளில் கண்ணீராய் வலிகளில் உதிரங்களாய்
நிறைந்து போய் கிடக்கின்றது....!
அவமானங்களும் தூற்றல்களும் புறந்தள்ளுகைகளும்
மலிந்து கிடக்கின்றது மனங்களில் ரணங்களாக....
மலிந்து கிடக்கின்றது மனங்களில் ரணங்களாக....
மறந்து சென்றிடாதே
மனதை வென்று இங்கே பொறுத்திரு....
மனிதம் அற்றுப்போன உலகில்
மனதை வெறுத்துக்காத்திரு...
மனதை வென்று இங்கே பொறுத்திரு....
மனிதம் அற்றுப்போன உலகில்
மனதை வெறுத்துக்காத்திரு...
கடந்த கால கறை துடைக்க விரைந்து வரும்
எதிர்காலம் பறை சாற்றும் விரைவில் உன் புகழை...
எதிர்காலம் பறை சாற்றும் விரைவில் உன் புகழை...
எழுந்து நில்...!
எமன் உன் காலடியில் வலை விரிக்கின்றான்....
விழுந்து விடாதே அவன் வலையில்....
எமன் உன் காலடியில் வலை விரிக்கின்றான்....
விழுந்து விடாதே அவன் வலையில்....
மனமாற்றம் நீ பெற்றிட வேண்டும் என்று
மனமுருகி மன்றாடுகின்றேன் ....
சிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்