பாதி வரை நடந்து வந்தும் ஓய்வில்லை...
வாழ்வினை கடந்து முடிய இயலவில்லை....
ஓய்வில்லை ஓட்டத்திற்கு
ஓயவில்லை பயணம்....!
திசைமாறிய பயணம் ஒன்றால்
திக்குத்தெரியாமல் போன வாழ்க்கை....!
நழுவ விட்ட பயணம் ஒன்றால்
நடு வழியில் பிரிந்து நிற்கும் உறவுகள்....!
பயணங்கள் முடிவதில்லை - எமக்கு
பயணமே தொடங்கவில்லை இன்னும்....
தொடங்காத பயணத்தில் சிக்கி நெரிபட்டு
மூச்சு திணறி மூர்ச்சையாகி போயாச்சு....!
வாழ்க்கை என்னும் பயணத்தில் பயணிக்கவென்றே
வரிசையாகி நிற்கின்றோம்...
காலங்கள் பயணிக்கின்றன
வரிசைகள் நகரவில்லை....!
கால்கள் பயணித்த தூரம் அளந்தால்
காலம் யாவும் எங்கள் காலடியில் தான்
உள்ளம் பயணிக்கும் பயணம் ஒன்றே....!
உண்மை என்பேன் மனதை வென்றே....!
உருக்குலைந்து போன நெஞ்சத்தின்
உக்கி மண்ணாய் போன நம்பிக்கையில்
உலகம் பயணிக்கின்றது பரிகசித்தபடி...
உருண்டு செல்லும் உலகின் பயணத்தில்
உருளாமல் நகராமல் எனது பயணம் மட்டும்
உடும்புப்பிடியாய் பற்றி நிற்கும் கோலம் என்ன....?
உணர்வற்றுப்போய் அசையாமல் காலம் நிற்பதென்ன...?
கடந்து விரையும் காலத்தின் பயணத்திலும்
அடித்து செல்லும் அலையின் பயணத்திலும்
முடித்து செல்லும் வாழ்வின் பயணத்திலும்
துடித்து விரையும் மரணத்தின் பயணத்திலும்....
படித்து கொண்டேன் கேட்டு அறிந்து கொண்டேன்
பயணங்கள் முடிவதில்லை மட்டுமல்ல
பயணங்கள் தொடங்கிடாமலும்
பயணங்கள் முடிவதில்லையும் என
தேடல்களின் தருணங்களோ
ReplyDeleteதருணங்களின் நிகழ்வுகளோ
பயணங்களின் வழியிலே
பவித்ரமான விளைவுகளாம்...
பயணங்கள் என்றும் முடிவதில்லை....
மிகவும் அருமையான ஆக்கம் சகோதரி...