Search This Blog

Wednesday 31 July 2013

இணையத்தில் வந்து எந்தன் இதயத்தில் பதிவான என் உயிர்த் தங்கையே..!

  • என் அன்பு அண்ணாவின் இதயம் பேசுகின்றது.....
    இணையத்தில் வந்து எந்தன் இதயத்தில் பதிவான என் உயிர்த் தங்கையே..! உந்தன் உதயத்தில் உருவான கவிவரிகளைக் கண்டு எந்தன் இதயம் அழுகின்றதம்மா... சோகத்தாலான அழுகையில்லையம்மா..! பேரானந்தத்தால் வந்த அழுகையம்மா!

    தங்கை இல்லை என்ற தவிப்பை என் இதயத்தில் இருந்து அழித்து புதுப் பதிப்பை உருவாக்கி என் இதயத்தை உயிர்ப்பாக்கிய என் அன்புத் தங்கையே..!

    எல்லோரையும் "தங்கை" என்றழைக்கின்ற போது என் மனதாலே மகிழ்கின்றேன். உன்னை மட்டும் என் தங்கை என்றழைக்கின்ற போதுதானே ... என் உயிராலே உருகுகின்றேன்.

    "என்னோடு ஒப்பிடும் போது எழுத்தில் நீ பூஜ்ஜியம் என்றாய்..!" - தவறம்மா... உன்னோடு ஒப்பிடும் போது என் எழுத்துக்கு நீதான் ராஜ்ஜியம் அம்மா! நீ ஒரு இலக்கியப் பிறப்பு..! அதனால்தான் உன்னிடம் என்னை இணைய வைத்தது உன் கவி வரிகளின் தனிச் சிறப்பு!

    உன்னை நான் அதிகமாக நேசிக்கின்றேன். என் நேசம் என்பது... காதலை விடப் புனிதமானது! கடலை விட ஆழமானது! புயலை விட வேகமானது! பூக்களை விட மென்மையானது! இது காதலும் அல்ல.. . இது காமமும் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது! எப்படி சொல்வதென்று எனக்குத் தெரியவும் இல்லை!

    உன்னில் நான் கொண்ட பாசத்தைச் சொல்ல எந்தக் கருவிகளும் இல்லை..! எந்த அளவீடுகளும் இல்லை..! நீயே கண்டு பிடித்துச் சொல்லம்மா...??? உன்னால் மட்டுமே முடியும்... என்னை அளப்பதற்கும் ... என்னை அழிப்பதற்கும்!

    உன் கவி வரிகளைப் படித்து தொலைத்து விட்டேன் என் எண்ணங்களை..! அதனால்,- உன்னை வாழ்த்த வார்த்தைகளே இல்லையென்று தவிக்கின்றேன். கோடி வார்த்தைகள் இருந்தாலும்... உன்னை வாழ்த்த... எந்த வார்த்தைகளுக்கும் தகுதியில்லை.! இருந்தும் என் அன்புத் தங்கையை வெறுமென அனுப்ப என் மனதிற்கு சம்மதமும் இல்லை..! உன்னை வாழ்த்த தேடித் தேடித் பார்க்கின்றேன்... இந்தத் தமிழ் மொழிகளில் அப்படியொரு புனிதமான.... அப்படியொரு பசுமையான.... வார்த்தைகளே இல்லை..! உன்னை வாழ்த்தாமல் இருந்தால் என் இதயம்.... இதயமே இல்லை..!

    அதனால் என் நெஞ்சைக் கிழித்து என் இதயத்தை அறுத்து உனக்கு அனுப்பி வைக்கின்றேன்... உன் அண்ணனின் அன்புப் பரிசாக ஏற்றுக்கொள்! என் இதயம் உனக்குள் இருந்து எப்போதும் உன் ஆயுள் வரையும்... உன்னை வளர்த்துக்கொண்டிருக்கும்! உன்னை வாழ்த்திக்கொண்டிருக்கும்!

    உன் உயிரான அண்ணா.
    (வல்வை அகலினியன்)

3 comments:

  1. ரசிக்க வைக்கும் ஆழ்ந்த உணர்வுடன் வாழ்த்துப்பா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. என்றும் நலமுடன்வாழ வாழ்த்துகள் அண்ணாக்கும் தங்கைக்கும்

    ReplyDelete
  3. உடன்பிறப்பின் வேதனைகளை அறிந்துகொள்ளமுடியாத சொந்தங்களை விட ..எங்கயோ பிறந்து முகநூல் மூலம் அறிமுகமாகி உடன்பிறப்பை போால் அவர்களின் இன்பதுன்பங்களில் பங்குகொள்ளும் உறவே மேல்...

    ReplyDelete