Search This Blog

Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

Wednesday 2 October 2013

"நம்பிக்கை" நலம் வாழவென்றே... நடிப்போடு துடிக்கின்றேன்...!!



துடிக்கின்றது இதயம் உனக்காக...!
துடிக்காமல் போகாதோ எனக்காக...!
மரணித்து தினம் துடிக்கும்
மரண தண்டனை கைதியாய்,,,,
மறக்க முடியா நினைவுகளோடு
மனிதக் காட்சி சாலையில்......
வரையறை இல்லாமல் நான்...!!


வெடித்து விம்மும் நெஞ்சம்
துடித்து மரணிக்கின்றது தினம்...!
என்னுடல் கூண்டில் வீணாய்..!
கணமும் தூண்டில் மீனாய்....
துடித்து மாண்டு துடிக்கின்றது
நெஞ்சக் கூண்டில் என்னிதயம்... !!!

நடித்து சிரிக்கின்றேன் நாளும்....
நம்பிக்கையின் மேல் உயிர் கொண்ட
நங்கை  என் இதயவளின்
நலன் விரும்பி.....


"நம்பிக்கை" உயிர் வாழ்கின்றது
நல்லிதயத்தின் வேகத்துடிப்பால்..!
"நம்பிக்கை" நலம் வாழவென்றே...
நடிப்போடு துடிக்கின்றேன்...!!



இணைப்பான  இதயங்களின் துடிப்பு நிலைத்திட
பிணைப்போடு  துடிக்கும்....


அரசி நிலவன்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "துடிப்பு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/