Search This Blog

Showing posts with label தோழன். Show all posts
Showing posts with label தோழன். Show all posts

Saturday 31 October 2009

இரவுக்கு.., நான் தோழன்..!! எனக்கு.., இரவு தோழன்..!!




காதலிக்கின்றேன், என்பாள் பொய்யே..!! 
காதலனே..! கண்ணாளனே..! என்பாள் பொய்யே..!!

நீயின்றி நானில்லை என்பாள் பொய்யே..!! 

நீர், நிலம், காற்று, சுற்றும் பூமி.. நீதான் என்பாள் பொய்யே..!

இதயத்தில் நீதான் என்பாள் பொய்யே..!! 

இதயத்துடிப்பே,, உனக்காகத்தான் என்பாள் பொய்யே..!!

உன் முகம் பார்க்காமல்,,, உயிர் வாழ மாட்டேன் என்பாள் பொய்யே..!! 

உலகமே எதிர்த்தாலும் உன்னோடு தான் என் வாழ்வென்பாள் பொய்யே..!!

பிரிந்து செல்லாதே.. என்பாள் பொய்யே..!! 

பிரியமான காதலா..! என்பாள் பொய்யே..!!

சிரித்து சிரித்து,, அழுவாள் பொய்யே...!! 

அழுது அழுது,, சிரிப்பாள் பொய்யே..!!

கை பிடித்து நடந்து, வந்ததும் பொய்யே..!! 

கண்ணீரில் என்னை கரைத்ததும் பொய்யே..!!

குதூகலித்து, பேசியதும் பொய்யே..!! 

குறுஞ்செய்தி சேவைகளும் பொய்யே..!!

"வருகின்ற திங்கள் திருமணம்,," என்பாள் உண்மையே..!!

"வரப்போகின்ற கணவன், வெளிநாட்டில்" என்பாள் உண்மையே..!!

"வருந்தாதே நண்பா,, "என்பாள் உண்மையே..!!

"வந்து விடாதே திருமணத்திற்கு,," என்பாள் உண்மையே..!!

இதயம் சுக்கு நூறாகி நிற்பேன் நான் மட்டுமே...!! 

இல்லறத்துணையுடன்,, இனிமை காண்பாள் அவள் மட்டுமே..!!


பொய்யை விலக்கி, உண்மையை தெரிந்தெடுக்க - நான்  

நீரை விலக்கி, பாலை உண்ணும் அன்னப்பறவை இல்லையே...!! 
ஏமாந்து விட்டேன் நான் - அதனால் 
ஏம்பலித்து தினம் துடிக்கின்றேன்..!! 




இருட்டினில் மட்டும் மெல்லக்கசியும் என் கண்ணீர்..!! 
இலவம் பஞ்சு தோற்று விடும் - என் 
இதயத்தின் மென்மையோடு..!! 
இருளோடு நான் மட்டும்  தனியாக !!
இரவுக்கு.., நான் தோழன்..!! எனக்கு.., இரவு தோழன்..!!




" அரசி நிலவன் "




குறிப்பு : விவேகசிந்தாமணியில் உள்ள "வெம்புவாள் விழுவாள் பொய்யே..." என்ற பாடலைத்தழுவி எழுதப்பட்டது ஆகும்.