Search This Blog

Showing posts with label கைது. Show all posts
Showing posts with label கைது. Show all posts

Saturday 13 March 2010

அதிகமாய் அடங்கி போக... அடிமைகள் இல்லை நாம்..!!!



   நாலாம் மாடியில்
   நான்கு திங்களாய்
   நா வறண்டு கிடக்கின்றோம்..!!
   நாயினை ஒத்து.... இல்லை
   நாய் கூட சுதந்திரமாய்..!


   நாதியற்று(சொந்தங்களின்றி)
   நாமில்லை..!
   நாதியற்ற(கேட்பாரற்ற) இனமென்பதாலோ..??
   நான்கு சுவருக்குள் நாம்..!!
   நாட்டினை ஆளும் இனம்
   நாலா புறமும் சேவையில்..!
   நாளை விடியுமா - நீண்ட
   நாளாக இதே ஏக்கம்..??


   அடைத்து வைத்து
   அழகு பார்க்கின்றார்கள்..!!
   மோத விட்டு எம் வீரத்தை பார்க்க..
   மோதி வெற்றி வாகை சூட..
   வீறு இல்லை இந்த
   வீணர்களுக்கு...!
   நிர்வாணத்தை எத்தனை நாட்களுக்கு
   நின்று நின்று ரசிப்பாய்..??


   பொங்கி வரும் உதிரம்...
   பொத்தி இறுக்கும் எம் கரங்களால்,,
   பொறுமையாய் அடங்கி போகின்றது..!!
   கொப்பளிக்கும் கோபம்... 
   அதரங்களை(உதடுகளை) துண்டிக்கும் - எம்
   கொலை வெறிப்பற்களின் நற நறப்பால்
   கொஞ்சம் தூரமாய் பயணிக்கின்றது..!!


   அரக்கர்களே..!!
   அதிகமாய் 
   அடங்கி போக...
   அடிமைகள் இல்லை நாம்..!
   அடங்க மாட்டோம்... 
   அதிக தினங்களுக்கு..!
   அதனால்..
   அப்புறமாகி போய் விடுவீர்..!
   அரவமின்றி(நிசப்தமாய்)...நீவிர்..!!!


   - அரசி -