Search This Blog

Saturday 6 December 2014

உவர்ப்பு....!

நிறைந்து கிடக்கும் பணம்...!
நிதி முட்டிய வீட்டில் உப்பும்
நிறைவாகவே இருக்கின்றது..!

நிரை நிரையாக நோய்களும்
நிதியினை போன்று நன்றே
நிறைந்திருக்கின்றது...!

நிம்மதியாக சுவைக்க முடியவில்லை
உவர்ப்பினை....

உழைத்துக் கொட்டிய பணத்தால்
உவர்ப்பினை விலை கொடுத்து
வாங்கிடத்தான் முடியவில்லை..!


நிறைந்து வழியும் வறுமையின் கோரத்தில்
நின்று நிதானிக்க நேரமில்லை...!

உப்பின் இருப்பிற்கும் வழி இல்லை...
வியர்வை சிந்தி  உழைத்து களைத்த
கூலிக்காரனின் பழைய சாதம்

சேர்க்காத  உப்பினால்
உவர்க்கத்தான் செய்கின்றது...!

சிந்திடும்  வியர்வையின் உவர்ப்பின் சுவையோ
வழிந்திடும் கண்ணீரின் சுவையோ....?



No comments:

Post a Comment